• Tue. Mar 26th, 2024

பலரையும் ஆச்சர்யப்படவைத்த நடிகை தேவயானி!

Sep 7, 2021

நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தேவயானி தம்பதிகள் அடிக்கடி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

மேலும், இவர்கள் அருகிலுள்ள மாத்தூரில் காணி வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அவர்கள் ஊருக்கு சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து தங்கள் இந்த நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே இரண்டு ஏக்கர் விவசாய காணியை மனையாக ஆக மாற்றியுள்ளனர்.

இதை அறிந்த தேவயானி அந்த நபரிடம் இரண்டு ஏக்கர் வீட்டு மனைகளையும் விலைக்கு வாங்கி அதை விவசாய காணியாக மாற்றி தற்போது இரண்டு ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.

தற்போது அந்த விவசாய காணி முழுவதும் செண்டுமல்லி பூத்து குலுங்குகிறது. தற்போது திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி திருவிழாவுக்காக தங்களின் மல்லி தோட்டத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

விவசாய காணிகள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் குறித்து பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.