• Thu. Apr 25th, 2024

போதைப்பொருள் விவகாரம்; ஷாருக்கான் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Oct 7, 2021

போதைப்பருள் விவகாரத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதை 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஆர்யனுக்கு ஷாருக்கான் போன்று நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை, ஆனால் படங்களை இயக்குவதில்தான் அதிகம் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது.

ஒரு நேர்காணலில் ஆர்யன் ஒரு சிறந்த எழுத்தாளர் என ஷாருக் குறிப்பிட்டார். இயக்குநருக்கான படிப்புகளையும் ஆர்யன் அமெரிக்காவில் பயின்றுள்ளார்.

தி இன்க்ரிடிபில்ஸ் என்ற படத்திற்கு டப்பிங் கொடுத்ததற்காக சிறந்த குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.

பெரியதிரை நட்சத்திரங்களின் குழந்தைகளைப் போலவே ஆர்யன் கானும் வெளிநாட்டில்தான் தன் படிப்புகளை மேற்கொண்டார்.

லண்டனின் செவென் ஓக்ஸ் பள்ளியில் 2016ம் ஆண்டு படிப்பை முடித்தார். அதன்பிறகு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ், சினிமேட்டிக் ஆர்ட்ஸ், பிலிம் அண்டு டெலிவிஷன் புரடக்‌ஷன் படிப்பில் சேர்ந்து இந்த ஆண்டில்தான் பட்டம் பெற்றார்.

இந்த சூழ்நிலையில்தான் கப்பலில் நடைபெற்ற போதைப்பார்ட்டியில் ஆர்யன்கான் கலந்து கொண்டாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேரை விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆர்யன் கான் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்தநிலையில் 3 நாட்கள் காவல் முடிந்ததும் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து ஆர்யன்கானை அக்.11 வரை விசாரிக்க வேண்டும் என்ற என்.சி.பி.யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.