• Thu. Apr 25th, 2024

பிரபாஸின் பாகுபலி பாணியில் மீண்டும் ஒரு படம்!

Jun 11, 2021

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.

சூப்பர் ஸ்டார் அளவுக்கு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதே போல கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல். இவர்கள் இருவர் கூட்டணியில் இப்போது சலார் என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் போது ஏற்பட்ட நட்பால் பிரசாந்த் நீல் சொன்ன வரலாற்று பின்னணிக் கொண்ட கதையில் நடிக்க சம்மதித்துள்ளாராம் பிரபாஸ். அந்த படம் பிரபாஸின் 25 ஆவது படமாக இருக்கும் என்றும் அதை தில் ராஜு தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.