• Sun. Jul 21st, 2024

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்

Aug 21, 2021

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார். முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடைபெறும் எனவும், அதன் பின்னர் 8 நாட்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அநேகமாக செப்டம்பர் 10 ஆம்தேதிக்குள் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புகள் நிறைவடையும் அதன் பின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.