• Mon. Feb 17th, 2025

தனது வாக்கை பதிவு செய்தார் விஜய்

Feb 19, 2022

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது தனது வாக்கை பதிவு செய்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்து நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது அப்பகுதியில் அவரது ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர்.