• Fri. Mar 29th, 2024

14 ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

Feb 1, 2022

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 14 ரயில் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ரயில்வே பிரதி பொது முகாமையாளர் ஏ.டி.ஜி. செனவிரட்ன, பிரதான ரயில் வழி பாதைகளில் 6 ரயில் சேவைகளும் கடல்வழி மார்க்க ரயில் பாதை மற்றும் களனிவெளி ரயில் பாதையில் 4 ரயில் சேவைகளும் புத்தளம் ரயில் பாதையில் 3 ரயில் சேவைகளும் வடக்கு ரயில் வழிப்பாதையில் குருநாகல் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரயில் ஒன்றும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருதானை ரயில்வே தொகுதியுடன் இணைந்த சேவையை மேற்கொண்ட ரயில்வே கட்டுப்பாட்டாளர் 17 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.