• Sat. Feb 1st, 2025

இலங்கையில் கொரோனா நிலவரம்!

Mar 4, 2022

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இதுவரை 16 ஆயிரத்து 287 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.