• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 09

Aug 9, 2021

ஆகத்து 9 கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 222 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.

378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.

1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார்.

1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.

1655 – ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.

1814 – கிறீக் அமெரிக்கப் பழங்குடியினர் அலபாமா, ஜோர்ஜியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளை அமெரிக்காவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1830 – பத்தாம் சார்லசு முடிதுறந்ததை அடுத்து லூயி பிலிப் பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1842 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராக்கி மலைத்தொடரின் கிழக்கே எல்லை அமைப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.

1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

1896 – ஓட்டொ லிலியென்தால் மிதவை வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

1902 – ஏழாம் எட்வர்டு, தென்மார்க்கின் அலெக்சாந்திரா ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.

1902 – யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

1907 – தெற்கு இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகத்து 1-இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1925 – இந்தியா, லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பினரால் கொள்ளையிடப்பட்டது.

1936 – 11-வது ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஓவென்ஸ் தனது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சாவோ தீவு சமரில், கூட்டுக் கடற்படையினர் சப்பானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் நாகசாகி நகர் மீது ஐக்கிய அமெரிக்கா கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 23,200-28,200 சப்பானிய போர்ப் பணியாளர்கள், 2,000 கொரியத் தொழிலாளிகள், 150 சப்பானியப் போர் வீரர்கள் உட்பட 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – சப்பானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட மஞ்சூரியா மீது சோவியத் செஞ்சேனைப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.

1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார். அவரது துணைத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அரசுத்தலைவரானார்.

1991 – யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் சூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

1992 – மயிலந்தனைப் படுகொலைகள்: இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

1999 – உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பிரதமர் செர்கே இசுடெப்பாசினை பதவியில் இருந்து அகற்றி, முழு அமைச்சரவையையும் கலைத்தார்.

2006 – திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.