• Fri. Apr 19th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 14

Aug 14, 2021

ஆகத்து 14 கிரிகோரியன் ஆண்டின் 226 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 227 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 139 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான்.

1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.

1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1592 – போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.

1791 – செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது.

1814 – சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.

1816 – டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இருந்து இது நிருவகிக்கப்பட்டது.

1842 – அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது.

1880 – 1248-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.

1888 – ஆங்கிலேய இசையமைப்பாளர் ஆர்த்தர் சலிவனின் த லொஸ்ட் கோர்ட் என்ற ஒலிப்பதிவு இலண்டனில் தாமசு அல்வா எடிசனின் கிராமபோன் அறிமுக நிகழ்வில் இசைக்கப்பட்டது.

1893 – வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல்படுத்தியது.

1900 – சப்பான், உருசியா, பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்கா, செருமனி, இத்தாலி, ஆத்திரியா-அங்கேரி ஆகிய எட்டு நாடுகள் இணைந்து சீனாவின் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.

1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரி மீது போரை ஆரம்பித்தது.

1921 – தன்னு உரியாங்காலி என்ற புதிய நாடு (பின்னர் துவான் மக்கள் குடியரசு) உருவாக்கப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

1936 – ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர் : ஆறு சப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1945 – வியட் மின் படைகள் ஆகத்து புரட்சியை ஆரம்பித்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.

1947 – பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.

1958 – தமிழ் மொழி (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[1]

1969 – வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 37 ஆண்டுகள் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது.

1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர்.

1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

2005 – சைப்பிரசில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தில் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர்.

2006 – செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.

2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – எகிப்தில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2015 – கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.

2018 – இத்தாலி, செனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.