• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 17

Aug 17, 2021

ஆகத்து 17 கிரிகோரியன் ஆண்டின் 229 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 230 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார்.

1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார்.

1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது.

1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர்.

1585 – வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர்.

1668 – உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர்.

1712 – டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.

1717 – ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின.

1740 – பன்னிரண்டாம் கிளெமெண்டுக்குப் பின்னர் பதினான்காம் பெனடிக்டு 247-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1807 – இராபர்ட் புல்டனின் நோர்த் ரிவர் நீராவிக் கப்பல் நியூயோர்க் நகரில் இருந்து ஆல்பெனி நோக்கி அட்சன் ஆற்றில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதுவே உலகின் முதலாவது நீராவிக் கப்பல் பயணிகள் சேவை ஆகும்.

1836 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பிறப்பு, திருமண, இறப்புப் பதிவுகளை சட்டபூர்வமாக்கியது.

1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்; லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1918 – போல்செவிக் புரட்சித் தலைவர் மொயிசேய் யுரீத்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் செருமனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் ரூசவெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவித்தது. இடச்சுப் பேரரசுக்கு எதிரான இந்தோனேசிய தேசியப் புரட்சி ஆரம்பமானது.

1947 – இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1958 – அமெரிக்காவின் சந்திரனைச் சுற்றும் முதலாவது திட்டம் பயனியர் 0 விண்ணுக்கு ஏவப்பட்டு 77 செக்கன்களில் அழிந்தது.

1959 – மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.

1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற தரம் 5 சூறாவளியில் 256 பேர் உயிரிழந்தனர்.

1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1977 – சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும்.

1988 – பாக்கித்தான் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.

1999 – வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2005 – காசாக்கரையில் இருந்து இசுரேலியர்களின் கட்டாய வெளியேற்றம் ஆரம்பமானது.

2005 – வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் 300 இடங்களில் ஐநூறுக்கும் அதிகமான குண்டுகள் தீவிரவாதிகளினால் வெடிக்க வைக்கப்பட்டன.

2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

2009 – உருசியா, அக்காசியாவில் அணை ஒன்று உடைந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

2015 – பேங்காக், பிரம்மன் கோயிலில் குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், 123 பேர் காயமடைந்தனர்.