• Sat. Apr 13th, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 14

Dec 14, 2021

டிசம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 348 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

557 – கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது.

1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1542 – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள்.

1782 – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.

1812 – உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானிய அரச கடற்படை லூசியானாவின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1819 – அலபாமா அமெரிக்காவின் 22-வது மாநிலமாக இணைந்தது.

1845 – ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமானது.

1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.

1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.

1900 – குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.

1902 – சான் பிரான்சிஸ்கோ முதல் ஒனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.

1907 – அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

1909 – ஆத்திரேலியத் தலைநகரை அமைப்பதற்கான நிலத்தை நியூ சவுத் வேல்சு மாநிலம் ஆத்திரேலிய பொதுநலவாய அரசுக்கு வழங்கியது.

1911 – ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றது.

1918 – செருமனிய இளவரசர் பிரீட்ரிக்கு கார்ல் வொன் எசென் முதலாம் வைனோ என்ற பெயரில் பின்லாந்து மன்னராக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவு செய்தது.

1918 – போர்த்துகல் அரசுத்தலைவர் சிதோனியோ பாயிசு கொல்லப்பட்டார்.

1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1939 – பனிக்காலப் போர்: பின்லாந்தை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்ததை அடுத்து நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.

1940 – கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் இணைந்து போரிட உடன்பட்டது.

1941 – உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.

1955 – அல்பேனியா, ஆஸ்திரியா, பல்காரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, யோர்தான், லாவோசு, லிபியா, நேபாளம், போர்த்துகல், உருமேனியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.

1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.

1963 – கலிபோர்னியா, லாசு ஏஞ்சலசு நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் ஐவர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1981 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேலின் நாடாளுமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் இசுரேலியச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

1992 – சியார்சியாவில் துகுவார்செலி என்ற இடத்தில் இருந்து அப்காசியா: அகதிகளை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 25 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2003 – பாக்கித்தான் அரசுத்தலைவர் பெர்வேஸ் முசாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.

2004 – தெற்கு பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

2012 – அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் சாண்டி ஊக் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 28 பேர் கொல்லப்பட்டனர்.