• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 2

Jul 2, 2021

சூலை 2 கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

437 – மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

936 – கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரது மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார்.

1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.

1822 – அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.

1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1839 – கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.

1853 – உருசியா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.

1871 – இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.

1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.

1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.

1921 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் வாரன் ஜி. ஹார்டிங் செருமனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1934 – செருமனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.

1937 – அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.

1940 – அரண்டோரா இசுட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.

1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

1962 – முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.

1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.

1986 – சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1997 – ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.

2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.

2004 – ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.

2010 – காங்கோவில் எண்ணெய் நிரப்பிய பாரவுந்து ஒன்று வெடிதத்தில் 230 பேர் உயிரிழந்தனர்.

2013 – உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.

2013 – 6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.

2016 – பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.