• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 9

Jun 9, 2021

சூன் 9 கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது.

கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான்.

68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.

1534 – இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.

1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.

1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.

1772 – பிரித்தானியப் பாய்க்கப்பல் காசுப்பீ உரோட் தீவில் தீக்கிரையானது.

1815 – வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.

1815 – லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1885 – சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.

1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.

1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

1923 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1928 – ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.

1935 – வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1936 – யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.[2]

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.

1946 – பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1953 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.

1959 – முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1962 – தங்கனீக்கா குடியரசாகியது.

1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.

1972 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.

1979 – சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

1999 – கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

2009 – பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.