• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 27

Oct 27, 2021

அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.

1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.

1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.

1682 – பென்சில்வேனியாவின்பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.

1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.

1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின்நகரினுள் நுழைந்தனர்.

1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களைஅமெரிக்கா இணைத்துக் கொண்டது.

1867 – கரிபால்டியின் படைகள் ரோம்நகருள் புகுந்தன.

1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.

1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.

1907 – அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

1914 – முதலாம் உலகப் போரில்பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசுஎன்ற போர்க்கப்பல் அயர்லாந்தின்வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.

1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில்இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

1924 – உஸ்பெக் சோவியத் குடியரசுசோவியத் ஒன்றியத்தில்அமைக்கப்பட்டது.

1936 – திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.

1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.

1961 – மூரித்தானியா, மங்கோலியாஆகியன ஐக்கிய நாடுகள் அவையில்சேர்ந்தன.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1971 – காங்கோ மக்களாட்சிக் குடியரசுசயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1973 – 1.4 கிகி விண்வீழ்கல்கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.

1979 – செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம்இருந்து விடுதலை பெற்றது.

1981 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.

1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால்தாக்கப்பட்டது.

1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

2007 – காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.

2014 – 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.

2017 – காத்தலோனியாஎசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.