• Fri. Apr 19th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 10

Sep 10, 2021

செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.

1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.

1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார்.

1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர்.

1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.

1798 – சென். ஜோர்ஜெசு கேய் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானிய ஒண்டுராசு எசுப்பானியாவைத் தோற்கடித்தது.

1817 – 1817-1818 பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது.

1823 – சிமோன் பொலிவார் பெருவின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1846 – எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – “55 பண்டோரா” என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 – ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.

1918 – உருசிய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.

1919 – போலந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஆஸ்திரியாவும் அதன் கூட்டு நாடுகளும் அங்கீகரித்தன.

1937 – நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின..

1939 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஒக்சுலி என்ற நீர்மூழ்கி தவறுதலாக பிரித்தானியாவின் டிரைட்டன் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா செருமனி மீது போரை அறிவித்து, நேச நாடுகளான போலந்து, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய இராணுவம் மடகாசுகரில் தரையிறங்கி மடகாஸ்கர் சண்டையில் நேச நாடுகளின் தாக்குதல்களை மீள ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஆக்சே நடவடிக்கையின் போது, செருமனியப் படைகள் உரோமை மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.

1960 – எத்தியோப்பியாவின் அபீபி பிக்கிலா உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் வெறுங்காலுடன் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார்.

1965 – இந்தியா-பாகிஸ்தான் போர், 1965: அம்ரித்சர் நகரை பாக்கித்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1967 – கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 – கினி-பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யுகோசுலாவியாவின் சாகிரேப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் உயிரிழந்தனர்.

1977 – பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2000 – சியேரா லியோனியில் இரண்டு கிழமைகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பிரித்தானியப் போர்வீரர்களை பிரித்தானிய இராணுவம் நடத்திய பராசு நடவடிக்கையில் விடுவித்தனர். உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது.

2000 – இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.

2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

2007 – 1999 அக்டோபர் இராணுவப் புரட்சியை அடுத்து, ஏழாண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த பாக்கித்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.

2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.

2017 – கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.