• Sat. Apr 20th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 15

Sep 15, 2021

செப்டம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 258 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 259 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது.

1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார்.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார்.

1795 – பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது.

1812 – பிரெஞ்சு இராணுவம் நெப்போலியனின் தலைமையில் மாஸ்கோவின் கிரெம்ளினை அடைந்தது.

1821 – எசுப்பானியாவிடம் இருந்து குவாத்தமாலா விடுதலையை அறிவித்தது.

1830 – லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார்.

1835 – சார்லசு டார்வின் பீகில் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வர்ஜீனியாவின் ஆர்ப்பர்சு துறையைக் கைப்பற்றினர்.

1869 – கர்னாட்டிக் என்ற பிரித்தானிய நீராவிக் கப்பல் இலண்டனில் இருந்து பம்பாய் செல்லும் வழியில் செங்கடலில் பவளப் பாறையில் மோதி மூழ்கியது. 26 பேர் உயிரிழந்தனர்.

1873 – பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சப்பான் பியொங்யாங் சமரில் சிங் சீனாவை வென்றது.

1915 – ஆத்திரேலியாவில் முதலாவது திரையரங்கு “நியூ எம்பயர் சினிமா” நியூ சவுத் வேல்சு, பௌரல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.

1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.

1935 – நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையில் பெரும் எண்ணிக்கையான லூப்டுவாபே வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.

1945 – தெற்கு புளோரிடாவிலும் பகாமாசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.

1947 – காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர்.

1948 – போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் இஞ்சியோன் நகரில் தரையிறங்கின.

1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

1958 – நியூ ஜேர்சியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

1959 – தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தில்லியில் ஆரம்பமானது.

1959 – நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது.

1963 – அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1971 – முதலாவது கிரீன்பீஸ் கப்பல் ஆம்சித்கா தீவில் அணுவாயுத சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகப் புறப்பட்டது.

1972 – இசுகாண்டினேவிய வானூர்தி ஒன்று கோத்தன்பூர்கில் இருந்து ஸ்டாக்ஹோம் சென்று கொண்டிருந்த போது கட்டப்பட்டது.

1974 – வியட்நாம் வீமானம் ஒன்று கடத்தப்பட்டு, தரையிறங்குகையில் 75 பேருடன் தரையில் மோதியது.

1975 – பிரெஞ்சுப் பகுதியான “கோர்சிகா” தீவு இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1983 – இசுரேல் பிரதமர் மெனசெம் பெகின் பதவி துறந்தார்.

1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நல்லூரில் நீராகாரம் இன்றி உண்ணா நோன்பைத் தொடங்கினார்.

2000 – 27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள், சிட்னியில் ஆரம்பமாயின.

2017 – லண்டன், பார்சன்சு கிறீன் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.