• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 21

Sep 21, 2021

செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 264 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 265 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 101 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.

1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.

1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.

1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார்.

1860 – இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன.

1896 – பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.

1898 – பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.

1921 – செருமனியில் தொழிற்சாலைக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

1934 – சப்பானில் மேற்கு ஒன்சூ பகுதியில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் உயிரிழந்தனர்.

1938 – நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் உயிரிழந்தனர்.

1939 – உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.

1942 – உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.

1964 – மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.

1965 – காம்பியா, மாலைத்தீவுகள், சிங்கப்பூர் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1971 – பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1972 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.

1976 – சீசெல்சு ஐநாவில் இணைந்தது.

1981 – பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத

1984 – புரூணை ஐநாவில் இணைந்தது.

1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1991 – ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1993 – உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்துச் செய்தார்.

1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.

2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.

2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

2013 – இலங்கையின் வட மாகாண சபைக்கு முதல் தடவையாகத் தேர்தல் நடைபெற்றது.

2013 – கென்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.