
சீத்தாப்பழத்தினை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சீத்தாப்பழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
- இதய நோய் வராமல் தடுக்கும்.
- நினைவாற்றலை அதிகரிக்கும்.
- ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும், மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
- உடல் எடையைக் குறைக்கும்.
- கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
- உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
- ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
- உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும்.
- உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.
- உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.