• Fri. Apr 19th, 2024

பிரியாணி இலையிலுள்ள மருத்துவ பலன்கள்

Oct 20, 2021

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது.

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.

பிரிஞ்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தலைவலியின் போது இந்த எண்ணையை தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி உடனே சரியாகிவிடும்.

பிரியாணி இலையில் உள்ள “என்சைம்ஸ்” என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது. பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும்.

பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.

சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த தண்ணீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.