• Fri. Apr 19th, 2024

இந்தியாவில் மீண்டும் மின்னல் மின்னல் வேகத்தில் அதிகரித்த கொரோனா!

Jan 6, 2022

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன் தின பாதிப்பான 37 ஆயிரத்து 379 மற்றும் நேற்றைய பாதிப்பான 58 ஆயிரத்து 97-ஐ விட மிக அதிகம் ஆகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 148.67 கோடி தடுப்பூசி , மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.