
கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 65 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 20 ஆயிரத்து 4 பேர் குணமடைந்துள்ள நிலையில் , கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 77 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது.