• Fri. Apr 19th, 2024

இந்தியா நோக்கி நகரும் புழுதிப்புயல்!

Jan 24, 2022

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக நேற்று மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதியில் புழுதிப்புயலால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக்குறியீடு 300 இக்கு மேல் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த புயலின் தாக்கம் 12 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன், முப்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.