• Tue. Apr 16th, 2024

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு!

Jan 22, 2022

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பஸ்கள் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசுப் பஸ்கள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பஸ்களும் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மொபைல் செயலிகள் மூலமாக ஆட்டோ, டாக்சிகளை முன்பதிவு செய்து செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.