
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் 6 படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி ஈடுபட்ட மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மன்னார்- தெற்கு கடற்பகுதியில் குறித்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களின் இரண்டு படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.