• Fri. Jul 26th, 2024

7 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பம்

Oct 30, 2021

தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் 7 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இப்போதே பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் இன்று துவங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் 7 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முறை மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.