• Wed. Apr 17th, 2024

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழனுக்கு கிடைக்கவுள்ள கௌரவம்!

Jul 7, 2021

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதன் தொடக்க விழாவில் இந்தியக் கொடியை தங்கவேலு மாரியப்பன் ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அதன் தலைவர் தீபா மாலிக் வெளியிட்டுள்ளார்.

இதே போல வருகின்ற 23 ஜூலையில் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்வில் பாட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து இந்தியக் கொடியை ஏந்திச்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.