• Thu. Apr 18th, 2024

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு பேருக்கு பாதிப்பா?

Oct 5, 2021

தமிழகத்தில் நடப்பாண்டில் 59,164 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

அதுமட்டுமன்றி, 2025 க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பு விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 15 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 59,164 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது.

அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 12,851 பேரும், அரசு மருத்துவமனைகளில் 46,313 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2020 இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 51,751 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.