• Wed. Mar 27th, 2024

1.20 கோடி மதிப்புடைய வைரத்தைக் கண்டுபிடித்த தொழிலாளி!

Feb 23, 2022

மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் கிருஷ்ணா கல்யாண்பூரில் வைர சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தின் அருகில் உள்ள கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சுஷில் சுக்லா மற்றும் அவரது கூட்டாளிகள் வைரம் தேடும்பணியில் ஈடுபட்டனர்.

வைரம் தேடுதல் வேட்டையில் சுஷில் சுக்லா நேற்று முன்தினம் 26.11 காரட் எடையுள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இந்த வைரம் ரூ.1.20 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

அதை ஏலத்தில் விற்கப்படும் என்றும், அதில் கணிசமான தொகை சுஷில் சுக்லாவுக்கு வழங்கப்படும் என்று பன்னாவின் வைர அதிகாரி ரவி படேல் தெரிவித்தார்.

சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக வைரச் சுரங்கப் பணியில் நானும், எனது குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம், ஆனால் இவ்வளவு பெரிய வைரம் கிடைத்தது இதுவே முதல் முறை. இதை ஏலத்தில் விட்டு வரும் பணத்தை கொண்டு சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதாக அவர் கூறினார்.