• Sat. Apr 13th, 2024

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு

Nov 30, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்இ புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,

வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 18நபர்களும்இ ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்களும்இ மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 46 குடும்பங்களை சேர்ந்த 142 அங்கத்தவர்களும்,

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களுமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன