• Sat. Mar 23rd, 2024

யாழ்ப்பாணத்தில் 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

Jun 9, 2021

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாட்களேயான குழந்தை ஒன்றுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இளவாலை பகுதியை சேர்ந்த 9 மாத குழந்தை ஒன்றுக்கும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத குழந்தைக்கும் அவரது பெற்றோருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.