• Sat. Jul 20th, 2024

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

Jan 27, 2022

இலங்கையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான வர்களின் ஆரோக்கியத்துக்கும் ஏனைய நீண்ட கால மற்றும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய சூழ்நிலையில், பூஸ்டர் டோஸைப் பெறுவது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதால் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இரண்டு மாவட்டங்களும் கொவிட் தொற்றின் தீவிர வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.