• Sun. Apr 14th, 2024

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Sep 16, 2021

சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூடிய விரைவில் அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.