• Sat. Apr 20th, 2024

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கிய இந்தியா

Jan 13, 2022

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.

இந்த தகவலை தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து இந்தியாவின் ஆதரவை இலங்கைக்கு தெரிவித்ததாக உயர்ஸ்தானிகர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் உட்பட 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.