• Mon. Apr 15th, 2024

யாழ். மாவட்ட மக்களுக்கு வந்த எச்சரிக்கை

Oct 28, 2021

நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக கடற்கரையினை அண்டிய பகுதியில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதோடு கடல் தொழிலுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் மறு அறிவித்தல் வரும் வரை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.