• Fri. Jul 26th, 2024

இலங்கையை இன்றுகாலை உலுக்கிய விபத்து

Nov 23, 2021

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்து நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முப்பது வயது தாய், ஆறு வயது மகன், மூன்றரை வயது மகள் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 70 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். படகு விபத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 19 பேர் கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அதேவேளை ஆறு வயது குழந்தையொன்றை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.