• Fri. Feb 14th, 2025

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

Mar 1, 2022

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பை நடைமுறைகளை பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

தற்போது வரையில் நாளாந்தம் சுமார் 1,200 கொரோனா நோயாளர்களின் பதிவாகி வருவதாக அவர் கூறினார். இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தில் இன்று (01) முதல் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.