• Fri. Apr 19th, 2024

யாழில் மூச்சு திணறல் காரணமாக மூன்றரை மாத குழந்தை பலி

Dec 23, 2021

மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென மூச்சடங்கி காணப்பட்டது.

உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.