• Thu. Mar 28th, 2024

எரிபொருள் வாகனம் வெடித்துச்சிதறியதில் 90 மேற்பட்டோர் பலி

Nov 6, 2021

ஆபிரிக்க நாடான சியராலியோனில் எரிபொருள் வாகனமொன்று வெடித்துச்சிதறியதில் 90க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தொன்றின் பின்னர் வாகனத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த எரிபொருளை பிடிப்பதற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது வாகனம் வெடித்துச்சிதறியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் இதன்போது எரிகாயங்களுடன் பல பிரேதங்கள் காணப்படுகின்றன என தேசிய பேரிடர் முகாமைத்துவ பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.