
இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவ மாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் துவங்கியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, இந்த ஆண்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை புதிய மட்டத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.
டிசம்பரில் 57,400 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பளித்து தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கியது கனடா. அதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 6.0 சதவிகிதமாக இருந்த வேலையில்லாமை வீதம், 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் 5.9 சதவிகிதமாக குறைந்தது.
பகுதி நேர வேலை பார்த்து வந்த பலர் நிரந்தர வேலைகளுக்குத் திரும்ப, முழு நேர வேலைகளின் எண்ணிக்கை 1,23,000ஆக உயர்ந்தது.
சென்ற ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்கள் வேலைக்குத் திரும்பியதைப் போல இல்லாமல், இந்த ஆண்டில், புதிதாக புலம்பெயர்ந்து வருவோருக்கு பெருமளவில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசப் பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, குறைந்திருந்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய நிலையை எட்டி வருகிறது.
குறிப்பாக, முறையான தொழில், அறிவியல் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவுகளில் அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் (சுமார் 26,000 பேர்). அதேபோல், மொத்த வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
அதாவது, தொழிலாளர் சந்தையில் புதியவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில், உயர் திறன் பணியாளர்கள் மட்டுமல்லாமல், தாழ்திறன் பணியாளர்களும் பங்கெடுப்பதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
கனடாவின் முக்கிய புதிய புலம்பெயர்தல் வழிமுறையான எக்ஸ்பிரஸ் நுழைவு உயர் திறன் பணியாளர்களை இலக்காக வைக்கும் போது, மாகாண நாமினி திட்டம் முதலான மற்ற வழிமுறைகள் தாழ்திறன் பணியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன.