• Sat. Mar 23rd, 2024

ஐ.பி.எல். க்கு மேலும் இரண்டு புதிய அணிகள்; அடுத்த மாதம் அறிவிப்பு

Sep 29, 2021

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் ஏனைய இரண்டு புதிய அணிகள் எவை என்பதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்று வெளியிடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டித் தொடரை 10 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

இதற்காக அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசத்தை பி.சி.சி.ஐ கொடுத்துள்ளது.

விண்ணப்பத்தை அடுத்து, எந்த இரண்டு அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கவுள்ளதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்ற அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.