• Sun. Apr 21st, 2024

ஓய்வை அறிவித்தார் மலிங்கா; ரசிகர்கள் சோகம்

Sep 14, 2021

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளாரக வலம் வந்த மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து 2019- ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். இந்த நிலையில், டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா தெரிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

ஓய்வு குறித்து மலிங்கா கூறுகையில்,
“ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

எனது அணிக்கும் அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார் மலிங்கா.