• Thu. Mar 28th, 2024

கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

Oct 8, 2021

நட்சத்திர கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

2009-ஆம் ஆண்டில் லாஸ் வெகாஸில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக கேத்ரின் மயொர்கா என்னும் மாடல் அழகி வழக்கு தொடுத்தார்.

தன் மீதான குற்றச்சாட்டை ரொனால்டோ தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரொனால்டோ மனு அளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, Mayorga-வின் வழக்கறிஞர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கண்டனம் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்தார்.