அபுதாபி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (18) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சு தெரிவித்துள்ளது.…