• Mon. Jul 22nd, 2024

லைகா நிறுவனத்திற்கு 5 கோடியை செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Mar 12, 2022

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம், 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கடன் பெற்றிருந்தார்.

அந்த தொகையை லைகா செலுத்திய நிலையில், அதனை விஷால் திருப்பி தரும் வரை, அவரது நிறுவன படங்களின் உரிமைகள் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பணத்தை தராமல், விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கவும் லைகா வழக்கு தொடர்ந்தது.

இதன் விசாரணையின்போது, 15 கோடி ரூபாயை வங்கியில் மூன்று வாரங்களில் செலுத்தி, அதன் ரசீதை சமர்ப்பிக்க விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது.