![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/dhanush.jpg)
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்ட நடிகர் தனுஷ். வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்த படங்கள் அனைத்தும் வெற்றிக்கனியை தட்டின.
ஆடுகளம் பொல்லாதவன் போன்ற படங்கள் தனுஷின் அடுத்த கட்ட சினிமா பயணத்திற்கு அழைத்துச் சென்றன. தற்போது பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை உலகம் முழுவதும் இவர் பிரசித்தி பெற்று விட்டார் நடிகர் தனுஷ். உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு தமிழ் நடிகர் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.
தற்போது இவர் நடிக்க வந்ததற்கு யார் காரணம் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது, ” நான் நடிக்க வந்ததற்கு முதல் காரணம் என் தந்தை தான். என் தந்தை கஸ்தூரி ராஜா தான் என்னை நடிக்குமாறு கூறினார்.
என் உடல்வாகிற்கு நடிப்பு எல்லாம் செட் ஆகாது என நான் கூறினேன். ஆனால் அவர் உனக்குள் ஒரு நடிகர் இருக்கிறார். அவரை நீதான் வெளியே கொண்டுவர வேண்டும் என கூறி என்னை வற்புறுத்தினார்.
இதனை தொடர்ந்தே நான் நடிக்க வந்தேன் நான் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தது முதல் இப்போது வரை நான் பெற்றுள்ள பெயர் ,புகழ் எல்லாவற்றிற்கும் காரணம் எனது தந்தைதான். ஆனால் சத்தியமாக ஒன்று மட்டும் தெரியவில்லை எப்படித்தான் என் தந்தை நான் நடிப்பேன் என்று நம்பினாரோ…?” எனக் கிண்டலாகக் கூறி சிரித்து அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார்.