• Thu. Mar 28th, 2024

மற்றொரு தொழிலை தொடங்கிய நயன்தாரா

Dec 11, 2021

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் நயன்தாராவுக்கு தமிழ் நாட்டிலேயே ரசிகர்கள் அதிகம். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

பின்னர் அவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறினார். இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

இருவரும் ஒன்றாக இணைந்து சமீபத்தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றொரு தொழிலையும் தொடங்கியுள்ளார்.

தோல் மருத்துவரான ரெனிடா ராஜனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கியுள்ளார். இதற்கு ‘தி லிப் பாம் கம்பெனி’என்ற பெயரை வைத்துள்ளார். பெயரிலேயே லிப் பாம் இருப்பதால் இது முழுக்க முழுக்க லிப் பாமிற்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நிறுவனம் என்பது தெரிகிறது.

https://www.instagram.com/p/CXTVO6Jlzox/

இந்த கம்பெனியை பற்றி விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களின் புதிய முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.