• Mon. Jul 22nd, 2024

இலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்

Aug 2, 2021

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தும் பணிகள் நேற்றும்(01) நடைபெற்றது.

இதற்கமைய நேற்று (01) காலை 8.30 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,075 பேருக்கு அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஹாரமாதேவி பூங்காவிலேயே குறித்த அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய, இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல பணிப்பகத்தின் வழிகாட்டலுக்கமைய தேசிய தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் வீரர்களால் கொழும்பு விஹாரமாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் தடுப்பூசிகள் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றது.