• Thu. Jul 25th, 2024

பெருஞ்சீரகத்தை தினமும் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பலன்கள்

Sep 4, 2021

சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் பெருஞ்சீரக நீரை அருந்தினால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.

பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டும். கொட்டாமல் இருக்க பெருஞ்சீரக எண்ணெய்யை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டும் பிரச்சனை நீங்கும்.

பெருஞ்சீரகத்தை பொடியாக்கி பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் புண்கள் ஆகியவை மறையும். தினமும் உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சீராக நடைபெறும். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் அஜீரண பிரச்சனை நீங்கும்.

வயிற்றில் பூச்சி தொல்லையால் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைப்பாடு காணப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இப்பிரச்சனையில் இருந்து விடுபட பெருஞ்சீரகத்தினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும்.

நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் கொழுப்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் இருக்கு உதவுகிறது. வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரை விட பெருஞ்சீரகம் நல்மருந்தாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் வியாதி வர வாய்ப்பு குறைவு.