• Tue. Oct 22nd, 2024

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Jul 9, 2021

பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸினையும் பெற்றிருந்தாலும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.