• Wed. Apr 17th, 2024

ஓய்வு பெறப் போகிறார் பிராவோ

Nov 5, 2021

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளையாடிக் கொண்டிருந்த பிராவோ திடீரென ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச போட்டிகளிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராவோ ஓய்வு பெற இருக்கிறார் என்றும் பேட்டிங் பவுலிங் என மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆல்-ரவுண்டராக கடந்த 18 ஆண்டுகளில் விளையாடிக்கொண்டிருந்த பிராவோ தற்போது ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிராவோ தனது ஓய்வு முடிவை இன்னும் ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.